பிரம்மத்தைப் பற்றிப் பேசிவிட்டு வெளியே வந்த அந்த சந்யாசியைப் பின் தொடர்ந்து ஒரே கூட்டம்..
அவர் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்,என்று கேட்டவர்கள் எல்லோரும் புகழ்ந்து சிலிர்த்துக் கொண்டார்கள்..
அப்போது யாரும் எதிர் பார்க்காத நேரத்தில்,எங்கிருந்தோ ஒரு நாய் அவரைப் பார்த்துக் குரைத்தபடியே ஓடி வந்தது...
சன்யாசியின் முகத்தில் அப்படி ஒரு பீதி...
எல்லோரைக் காட்டிலும்,நாயைக் கண்டு பயந்தோடியது அவர்தான்..
ஆத்ம ஸ்வரூபம் என்றெல்லாம் அவரது பின்னால் ஓடியவர்களுக்கே புரியாத விஷயங்களைப் பேசியவர் .
பயம் என்றால் என்ன என்று அவர்களுக்கு எல்லாம் விளக்கியவர்.
இப்போது ,மற்றவர்கள் யாரும் தன்னைப் பின் தொடர முடியாத வேகத்தில் ,
ஒரு நாயைக் கண்டு பயந்து இந்த வேகத்தில் ஓடினார் என்றால்
அந்தச் செயல் மூலம் தங்களுக்கு ஏதோ சொல்ல முயல்கிறார் என நினைத்த ஒருவன்தான் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ள அவர் பின்னால் விடாமல் ஓடினான்.
கடைசியாக,நாயிடம் இருந்து தப்பித்தவுடன் அந்த சன்யாசியின் முகத்தில் மீண்டும் அந்தப் பழைய தேஜசைக் கண்டு உள்ளூர நெகிழ்ந்தான்,துரத்தி வந்து அவரைப் பிடித்தே விட்ட அந்த பக்தன்...
இருவரும் மூச்சு வாங்க நின்றார்கள்.
அப்போது அவன் கேட்டான் .
'சாமி, பயமே கூடாது என்று எங்களுக்கெல்லாம் உணர வைத்த நீங்கள்,கேவலம் ஒரு நாயைக் கண்டு பயந்து ஓடியதன் உள்ளர்த்தம் என்ன என்று எனக்கு மட்டும் சொல்லுங்கள் '
'ஒன்றுமில்லை,இந்த நாயைக் கண்டால் மட்டும் எனக்குப் பயம் !!ஏனென்றால் இது,நான் கைவிட்டு விட்டு வந்த என் சம்சாரம் வளர்க்கும் நாய்.இது ஒன்றுக்கு மட்டுந்தான் என்னைப் பார்த்தால்,நான் யார் என்ற அடையாளம் தெரியும் '
என்றார் அந்த சந்நியாசி..
துரத்தி வந்தவன் ஒரு கணம் கழித்து 'ENLIGHTENED' ஆனான்..
வெள்ளி, ஜனவரி 30, 2009
வியாழன், ஜனவரி 29, 2009
புத்தர் முகத்தில் ரத்தம்..
அவர்கள் இருவரும் இறக்கும் தறுவாயில் கிடந்தார்கள் ..
இருவர் முகங்களுக்கும்
நடுவில் உடைந்து கிடந்த
புத்தர் சிலையின் முகத்தில் ரத்தம் ..
இன்னும் தூரத்தில் குண்டு வீசும் விமானங்களின் சத்தம்..
அவன் அவளை முத்தமிட முயன்ற போதெல்லாம்
அவள் அவனுடன் சண்டைதான் போட்டிருக்கிறாள்..
பக்கத்து வீட்டுக் குழந்தையாய் அவன் வீட்டு வாசலுக்கு
அவள் தவழ்ந்து வந்த போது அவன் சிறுவன் ..
அப்போதும் அவன் தாவி எடுத்து முத்தமிட முயல்கையில்
அவள் கோபித்துக் கொண்டு அழுதாள்..
பள்ளிக் கூட அறையில்,
ஜன்னல் வழியே மற்ற மாணவர்கள் பார்த்துச் சிரித்துவிட
பாதியிலேயே கோபித்துக் கொண்டு ஓடி விட்டாள்...
கல்லூரி மரத்தடியில், அவளாக வந்த அன்று
அவன் வாழ்வில் முதல் வாய் மது அருந்தி இருந்ததில் வந்த கோபம்..
திருமண நிச்சயத்தன்று
உள்ளறையில் நெருங்கிய போது
அவள் அண்ணனை எதிரிகள் கொன்று விட்டார்கள் என்ற
செய்தி கேட்டு வந்த கோபம்...
குண்டு வீச்சில் அப்பா அம்மாவைப் பறிகொடுத்து விட்டு
அவன் கதறிய போது
அணைத்துக் கொண்ட அவளுக்கு
மேலே பறந்து போன விமானத்தின் மீது கோபம்...
இப்போது போராளியாய் அடிபட்டுச் சாகக் கிடக்கும் அவனும்
அகதியாய்த் தப்பித்தோடும் போது பிடிபட்டு உருக்குலைந்த அவளும் .. இதுவரை இழந்த முத்தங்களை எல்லாம் ஈடுகட்டி
தன் கடைசி மூச்சில் அவள் புன்னகையாக மாற்றித் தர,
அவன் பார்த்து மடிவதற்குள்
குறுக்கே வந்தன இரண்டு ராணுவக் காலணிகள்..
இருவர் முகங்களுக்கும்
நடுவில் உடைந்து கிடந்த
புத்தர் சிலையின் முகத்தில் ரத்தம் ..
இன்னும் தூரத்தில் குண்டு வீசும் விமானங்களின் சத்தம்..
அவன் அவளை முத்தமிட முயன்ற போதெல்லாம்
அவள் அவனுடன் சண்டைதான் போட்டிருக்கிறாள்..
பக்கத்து வீட்டுக் குழந்தையாய் அவன் வீட்டு வாசலுக்கு
அவள் தவழ்ந்து வந்த போது அவன் சிறுவன் ..
அப்போதும் அவன் தாவி எடுத்து முத்தமிட முயல்கையில்
அவள் கோபித்துக் கொண்டு அழுதாள்..
பள்ளிக் கூட அறையில்,
ஜன்னல் வழியே மற்ற மாணவர்கள் பார்த்துச் சிரித்துவிட
பாதியிலேயே கோபித்துக் கொண்டு ஓடி விட்டாள்...
கல்லூரி மரத்தடியில், அவளாக வந்த அன்று
அவன் வாழ்வில் முதல் வாய் மது அருந்தி இருந்ததில் வந்த கோபம்..
திருமண நிச்சயத்தன்று
உள்ளறையில் நெருங்கிய போது
அவள் அண்ணனை எதிரிகள் கொன்று விட்டார்கள் என்ற
செய்தி கேட்டு வந்த கோபம்...
குண்டு வீச்சில் அப்பா அம்மாவைப் பறிகொடுத்து விட்டு
அவன் கதறிய போது
அணைத்துக் கொண்ட அவளுக்கு
மேலே பறந்து போன விமானத்தின் மீது கோபம்...
இப்போது போராளியாய் அடிபட்டுச் சாகக் கிடக்கும் அவனும்
அகதியாய்த் தப்பித்தோடும் போது பிடிபட்டு உருக்குலைந்த அவளும் .. இதுவரை இழந்த முத்தங்களை எல்லாம் ஈடுகட்டி
தன் கடைசி மூச்சில் அவள் புன்னகையாக மாற்றித் தர,
அவன் பார்த்து மடிவதற்குள்
குறுக்கே வந்தன இரண்டு ராணுவக் காலணிகள்..
Labels:
கவிதை..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
