2.
அவன் என்னைச் செதுக்க ஆரம்பித்தான்.
தான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.
பேராற்றலாய்ப்,பேரானந்தமாய்ப்,பேரமைதியாய் நுட்பத்திலும் நுட்பமாய் இருக்கும் நான், அந்த இரண்டடிக் கல்லுக்குள் பிரவகித்து நான்,நானாய் விளங்க முடியுமா?
நான் என்ற விளையாட்டு எப்போது தொடங்கியதோ அப்போதே இது சாத்தியம் என்று எனக்கு நானே புன்னகைத்துக் கொண்டேன்.
உங்கள் கண்ணின் சிறிய பாப்பாவுக்குள் முழு ஆகாயமும் அடங்கி விடவில்லையா?அது போல.
நான் என்று நினைத்த தருணத்திலேயே சிவம், சக்தி ஆகி இந்தப் பேரண்டமும் ஆனது.
உங்கள் பின்னாளில் BIG BANG என்று அறிவியலாளர்கள் சொன்னது சிவத்தின் இந்த 'நானைத்தான்'
கல்லுக்குள் நான் உருவாகலானேன்.
எனது நெற்றியில் அவன் அனைத்து உயிர்களின் தலையெழுத்துக்களையும் செதுக்கினான்.
அவன் எனது செவிகளைச் செதுக்கும் போது யமுனை ஆற்றங்கரையில் இடையனாய் நான் என்றோ வாசித்த ஒற்றைக் குழலின் இசையை மட்டுமல்ல, இனி வரப்போகும் அனைத்து ராக ஸ்வரங்களின் மயக்கும் இனிமைகளையும்,,பியானோவின் மென்மையான வருடல்களையும்,கீ போர்டின் தழுவல்களையும், வயலின்களின் அரவணைப்புக்களையும், எலக்ட்ரானிக் கருவிகளின் துள்ளல்களையும் கேட்டுணர்ந்தான்.
பல யுகங்களுக்கும் சேர்த்து வழி விட்ட ஒலிகளின் சங்கீதத்தை, அவன் எனது செவிகளின் மூலமாக ரசித்தான்.இதற்கு முன்னர் பிறந்த,இனிப் பிறக்கப் போகும் பாடகர்களும்,பாடகிகளும்,இசை மேதைகளும் அவனுள் உருகி,வழிந்தார்கள்.
இன்னும் திறக்கப் படாத எனது மூடிய விழிகளுக்குள்ளே மனித மனங்களின் அத்தனை,கனவுகளும்,கற்பனைகளும்,வன்முறைகளும்,வக்கிரங்களும் மொய்த்திருப்பதைக் கண்டான்.
எனது நாசியில் உலகத்து நறுமணங்களை எல்லாம் அவன் முகர்ந்தான்.
அந்தரங்கத்தில் மோஹத்தின் கண்ணி வெடிகளாய் வெடிக்கும் அந்தி மல்லிகைகளின் சுக வாசனைகளையும்,அருவிக் குளியலின் புத்துணர்ச்சியைக் கிளப்பும் செயற்கை சிட்ரஸ்களின் பரிசோதனச் சாலை நறுமணங்களையும்,நெருங்கிய கன்னிப் பெண்ணின் மூச்சுக் காற்றைப் போன்ற முல்லைப் பூக்களின் கொல்லும் மணங்களையும்,அனைத்தில் இருந்தும் விடுபட்ட மனித மனம் அனுபவிக்கும் சந்தன சுகந்தத்தையும்,ஒருவரோடு ஒருவர் சங்கமிக்கும் தருணத்தில் மட்டும் அனுபவிக்கும் வியர்வையின் புனித நெடியையும் அவன் முகர்ந்து வாசனைகளின் சமாதி அடைந்தான்.
வெண்புறாவின்,அதுவும் பெண்புறாவின் அடிவயிற்றுச் சிறகுகளை எனது கன்னங்களில் தொட்டான்.
காமத்தின் முதல் படியும்,காதலின் கடைசிப் படியுமான எனது உதடுகளை அவன் செதுக்கும் போதுதான் நானே எனது பெண்ணிருப்பை உணர்ந்தேன்.
இயல்புகள் எதுவுமற்ற பிரும்மத்தைப் பெண்ணாக்கிப் பார்க்கும், பிரும்மத்தின் விளையாட்டே அவன் மூலம் நடக்கிறது என்பதை உணர்ந்து நானே என்னை ரசித்தேன்.
சிவம் தன்னை சக்தியாக்கித் தன்னைத் தானே பார்த்ததிலிருந்துதான் ரசனையே தொடங்கியது.
தன்னை ரசித்த குழந்தை மனம் தான், முதலில் தாயையும்,பிறகு மற்றவற்றையும் ரசிக்க ஆரம்பிக்கிறது என்று பின்னாளில் மனோதத்துவ ஞானிகள் சொன்னது இதனைத்தான்.
அவன் செதுக்கிய எனது பெண் உதடுகள்.
ஆண்களின் தர்க்க ஞானத்தின் வறட்சியை எல்லாம் துடைக்க வந்த இயற்கையின் முதல் ஈரம் பெண்ணின் உதடுகளில் இருந்துதான் உற்பத்தி ஆகிறது.
முத்தம் என்ற மனித இனப்பெருக்கின் கங்கோத்ரி.
உதடுகளே படைப்பின் முதல் புனிதஸ்தலம்.
கண்ணாடியே கண்ணடியைப் பார்த்துக் கொள்வதைப் போல என்னை நானே பார்த்து ரசித்த வேடிக்கையில் எனது உதடுகளில் புன்னகை சுழிந்தது.
பிறகு கழுத்தினைச் செதுக்கினான்.காதுகளில் அவன் கேட்ட அனைத்து இசையினையும் வெல்லும் எனது மழலைச் சிணுங்கல்கள் பிறக்கும் இடம் என்பதனை உண்ர்ந்தான் அவன்.
என்ன உயிர் போகும் வேதனை என்றாலும் தொட்டவுடன் அதனை மாயமாய் மறையச் செய்யும் எனது மெல்லிய கரங்களும்,பூ விரல்களும்.
அவன் எனது மார்புக்கு வரும் போது குகையின் கூரை துவாரத்தின் வழியே பௌர்ணமியும் வந்தது.நிலவின் ஒளியில் குகையே குளிர்ந்து போகப்,பெண்ணுடலிலேயே மிகக் குளிர்ச்சியான பாகமான எனது மார்பகங்களைச் செதுக்கினான் அவன்.
'இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு, இறுகி,இளகி,முத்து வடங்கொண்ட கொங்கை' என்று பின்னாளில் அபிராமிப் பட்டர் வருணித்ததைப் போல் அல்லாமல்,
ஆண்களின் உயிர் முனைகளை எல்லாம் சுருட்டிப் பிடித்து வைத்திருக்கும் இரண்டு கைப்பிடிகளைப் போன்ற அளவான சிறிய மார்புகள்.
இதயத்திலிருந்து அன்பும் கருணையுமே இரண்டாக முளைத்துக் கிளம்பினாற் போன்ற இரண்டு தாய் முலைகள்.
பருகினால் மனதின் அடையாளங்கள் எல்லாம் கரைந்து போய்,மனமே மறைந்து சிவஸ்வரூபம் ஆகி விடுவதால் மனிதர்களாய் யாரும் உண்ணா முலைகள்.
உண்பதை மட்டுமல்ல பார்ப்பவர்கள் மனதையும் செரிக்கும் மணிவயிறு.
கர்ப்ப காலத்தில் மட்டும் தனது இருப்பைக் கூட்டி,மேனியின் எழில்கள் அனைத்தையும் கூட்டும் பெண்வயிறு.
படைப்பின் கருவூலம் மிளிரும் இடை.
திரயம்பகா என்று சிற்ப சாஸ்திரத்தில் பெண்ணுக்கே உரிய அங்க லாவண்யங்களாக வருணித்திருக்கும் மூன்று பகுதிகள் மார்பும்,இடையும்,பின்னழகும்.
துறவுக்கு மாபெரும் இரண்டு தடைக் கற்களைப் போன்ற எனது பின்னழகுகள்.
காமத்தின் அளவுகோல்களைப் போன்ற இரண்டு தொடைகள்.
கடைசிப் பற்றும் உதிர்ந்த பின்னர் மனிதன் இயல்பாகவே அடைக்கலம் சேரும் பாத கமலங்கள்.
இப்படி நான் முழுதும் விக்ரஹமாக உருவாக ஏழு நாட்கள் ஆகின.
சனி, ஆகஸ்ட் 08, 2009
வெள்ளி, ஆகஸ்ட் 07, 2009
ஒரு தெய்வத்தின் நாட்குறிப்பு
நான் வெளிப்பட்ட போதுதான் இந்த ஒலி பிறந்தது.
ஒலியிலிருந்து இந்தச் சொற்கள் பிறந்தன.
சொற்களில் இருந்து இந்த எழுத்துக்கள் பிறந்து எனது நாட்குறிப்பு ஆனது.
இந்த நாட்குறிப்பின் காலம் உங்கள் வார்த்தைகளில் ஐந்தாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
ஏனெனில் எனக்குக் காலம் இல்லை.
அந்த அடுக்கடுக்கான மலைத் தொடரில் அது ஆறாவது மலை.
பச்சை நிறமே கெட்டி தட்டிப் போனாற் போல அடர்ந்த மலைக் காடு.
அந்தக் காட்டில் அவன் நீண்ட காலமாகத் தனியே திரிந்து கொண்டிருந்தான்.
முடியும்,சடையுமாக.சில காலம் மேல் துணியோடு,சிலகாலம் அதுவும் இன்றி.
அவனைச் சில வேடுவர்கள் மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.
புலி வேட்டைக்காக ஆறாவது மலையில் இருக்கும் மேல் காட்டுக்கு வரும் அவர்கள் எப்போதாவது அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவன் விந்தி,விந்தியே நடந்ததினால் அவனை அவர்கள் முடவாண்டிச் சித்தர் என்று அழைக்கத் தொடங்கி அதுவே அவனுக்குப் பெயராயிற்று.காலில் எப்போதோ பட்ட காயம் அவன் மேல் நிரந்தரமாகத் தங்கிப் போனது,அதனாலேயே அவன் விந்தி,விந்தி நடக்கிறான் என்று வேடுவர்கள் அறிந்திருந்தார்கள்.
அவனை வேடுவர்கள் கூட அரிதாகவே பார்க்க முடியும்.
சில நேரங்களில் அந்திச் சூரியனின் பொன்னொளியில் மலை முகட்டை நோக்கி விந்தி,விந்தி நடந்து கொண்டிருப்பான்.
சில வேளைகளில் நாட்கணக்கில்,ஏன் வாரக் கணக்கில் கூட மலைப் பலா மரத்தடியில் கண்கள் மூடிச் சிலையென அமர்ந்திருப்பான்.
சில நாட்களில் வைர மணி அருவியில் சில்லென நனைந்து கொண்டே இருப்பான்.வைர மணி அருவியின் தண்ணீர் அவர்கள் யாராலும் பொறுக்க முடியாத சில்லிப்புடன் இருக்கும்.அந்த அருவியில் குளிப்பதை அவர்கள் ஊசிக் குளியல் என்று கூறுவார்கள்.மலை உச்சியில் இருந்து ஒரு கோடி ஊசிகள் பாய்ந்து வந்து குத்துவதைப் போல் இருக்கும் அந்த அருவியில் அவன் மட்டும் நாள் கணக்கில் குளித்துக் கொண்டிருப்பதை அவர்கள் வியப்புடன் பார்ப்பார்கள்.
நிறையச் சமயங்களில் அவன் பறவைகளோடு பறவையாக நெடிதுயர்ந்த கொன்றை மரத்தின் கிளையில் அதன் செம்பூக்களிடையே அமர்ந்திருப்பான்.பறவைகள் அவனது இருப்பையே பொருட்படுத்தாமல் அமைதியாக அவன் அருகே வீற்றிருப்பது அவர்கள் பார்த்த அதிசயங்களில் ஒன்று.
அதை விட அவர்கள் வியந்து பார்க்கும் காட்சி ஒன்று உண்டு.
ஆறாம் மலைக் காட்டில் தேர்ந்த வேட்டைக் காரர்களான அவர்களுக்கே பல மாதங்களாகப் போக்குக் காட்டி வரும் ஆட்கொல்லிப் புலி ஒன்று இருக்கிறது.அதற்கு அவர்கள் 'மஞ்சள் காற்று' என்று பெயர் வைத்திருக்கிறாகள்.மஞ்சள் காற்று எப்போது அடிக்கும், எப்போது மறையும் என்று யாருக்குமே தெரியாது.
அந்த மஞ்சள் காற்றுக் கூட அவன் கண்மூடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது அவனருகில் அவர்களது வீட்டு நாய் போல் அவனது அருகில் விழித்தபடி படுத்துக் கிடக்கும்.அதற்குப் பிறகுதான் அவனை முடவாண்டிச் சித்தர் என்று அவர்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.
அவன் அவர்கள் யாருடனும் பேசியதே இல்லை.எப்போதாவது அவர்களைப் பார்ப்பதுண்டு.அப்போதுதான் அவனது கண்களை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
அப்ப்பா! என்ன கண்கள்!
பார்ப்பதற்கு மட்டுமின்றிப், பார்க்கப் படுவதற்குமான கண்கள்!
அவனது ஒரு கண நேரப் பார்வை பட்டாலே வைரமணி அருவியே சட்டென்று அவர்கள் மீது கொட்டித் தீர்த்ததைப் போல உடம்பே சில்லென்று வேர்த்துப் போகும்.
ஆறாம் மலையில் நிறையக் குகைகள் உண்டு.ஒரு குகைக்கு மட்டும் சூரியக் குகை என்று வேடுவர்கள் பெயர் வைத்திருந்தார்கள்.அந்தக் குகையில் மட்டும் மேல் கூரையில் ஒரு அரை அடி விட்டமுள்ள வட்டமாக மலையே வழி விட்டுச் சூரிய ஒளியும்,நிலவின் ஒளியும் உள்ளே பாயுமாறு அமைந்திருந்தது.
அந்த மலைத் தொடரில் மூன்றாம் மலை வரையிலுமே மனிதர்கள் வாழ்ந்தார்கள்.அடிவாரத்திலிருந்து மூன்றாம் மலை வரையிலுமே சிறு,சிறு வேட்டுவக் குடியிருப்புக்கள் இருந்தன.மூன்றாம் மலைக்கு மேல் கொடிய விலங்குகளும்,பனிக்குளிரும் மனிதர்களை மேலே வராவண்ணம் விலக்கி வைத்திருந்தன.
முடவாண்டிச் சித்தரைத் தவிர ஆறாம் மலையில் யாராலும் வாழ முடியாது என வேட்டுவக் கிராமங்களில் பேசிக் கொள்வார்கள்.
ஆறம் மலையில் மட்டும் பனி போர்த்திய வைகறை வேளைகளிலும்,அந்தி வேளைகளிலும் உடுக்கைச் சத்தம் கேட்கும். மேல் மலைக்குச் சென்ற வேடுவர்கள் சித்தர் கையில் என்றும் உடுக்கையைப் பார்த்ததில்லை.அதே போல் சில நேரங்களில் சூரியக் குகையில் மட்டும் நெருப்பெரிவது தெரியும்.அதற்கான சாதனங்களைக் குகைக்கு உள்ளேயோ,சித்தரின் கைகளிலோ அவர்கள் என்றுமே பார்த்ததில்லை.
ஒரு நாள் வைகறையில் அவன் வைரமணி அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவனது காலடியில் ஒரு மலைக் கருங்கல் அருவியோடு அருவியாக உருண்டு வந்து விழுந்தது.குனிந்து அதனைத் தொட்டுப் பார்த்தான்.
பல வருட அருவித் தண்ணீர் தேய்த்துத் தேய்த்துக் கல்லைக் கறுப்புப் பளிங்காக்கி இருந்தது. இரண்டடி உயரத்தில் கறுப்பு முட்டை போல் இருந்தது அந்தக் கல்.
அருவி தன் மேலே கொட்டக் கொட்டக் கல்லையே பார்த்துக் கொண்டிருந்த அவன்,பிறகு அதனை அனாயசமாக எடுத்துக் கொண்டு அருவியிலிருந்து சொட்டச் சொட்ட நனைந்தபடியே நடந்தான்.
சூரியக் குகைக்குள் கல்லைக் கொண்டு வந்த அவன் குகையின் நடுவில் அதனை நிறுத்தி வைக்கப் பளீரெனக் காலைக் கதிரவனின் ஒளி கல்லின் மேல் விழுந்தது.வெளியே சென்றவன் திரும்பி வந்த போது அவனது கையில் ஒரு சிற்பியின் உளியும்,சிறு சுத்தியலும் இருந்தன.
அவன் என்னைச் செதுக்கத் தொடங்கினான்.
தான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.
(எனது தரிசனம் தொடரும்)
ஒலியிலிருந்து இந்தச் சொற்கள் பிறந்தன.
சொற்களில் இருந்து இந்த எழுத்துக்கள் பிறந்து எனது நாட்குறிப்பு ஆனது.
இந்த நாட்குறிப்பின் காலம் உங்கள் வார்த்தைகளில் ஐந்தாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
ஏனெனில் எனக்குக் காலம் இல்லை.
அந்த அடுக்கடுக்கான மலைத் தொடரில் அது ஆறாவது மலை.
பச்சை நிறமே கெட்டி தட்டிப் போனாற் போல அடர்ந்த மலைக் காடு.
அந்தக் காட்டில் அவன் நீண்ட காலமாகத் தனியே திரிந்து கொண்டிருந்தான்.
முடியும்,சடையுமாக.சில காலம் மேல் துணியோடு,சிலகாலம் அதுவும் இன்றி.
அவனைச் சில வேடுவர்கள் மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.
புலி வேட்டைக்காக ஆறாவது மலையில் இருக்கும் மேல் காட்டுக்கு வரும் அவர்கள் எப்போதாவது அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவன் விந்தி,விந்தியே நடந்ததினால் அவனை அவர்கள் முடவாண்டிச் சித்தர் என்று அழைக்கத் தொடங்கி அதுவே அவனுக்குப் பெயராயிற்று.காலில் எப்போதோ பட்ட காயம் அவன் மேல் நிரந்தரமாகத் தங்கிப் போனது,அதனாலேயே அவன் விந்தி,விந்தி நடக்கிறான் என்று வேடுவர்கள் அறிந்திருந்தார்கள்.
அவனை வேடுவர்கள் கூட அரிதாகவே பார்க்க முடியும்.
சில நேரங்களில் அந்திச் சூரியனின் பொன்னொளியில் மலை முகட்டை நோக்கி விந்தி,விந்தி நடந்து கொண்டிருப்பான்.
சில வேளைகளில் நாட்கணக்கில்,ஏன் வாரக் கணக்கில் கூட மலைப் பலா மரத்தடியில் கண்கள் மூடிச் சிலையென அமர்ந்திருப்பான்.
சில நாட்களில் வைர மணி அருவியில் சில்லென நனைந்து கொண்டே இருப்பான்.வைர மணி அருவியின் தண்ணீர் அவர்கள் யாராலும் பொறுக்க முடியாத சில்லிப்புடன் இருக்கும்.அந்த அருவியில் குளிப்பதை அவர்கள் ஊசிக் குளியல் என்று கூறுவார்கள்.மலை உச்சியில் இருந்து ஒரு கோடி ஊசிகள் பாய்ந்து வந்து குத்துவதைப் போல் இருக்கும் அந்த அருவியில் அவன் மட்டும் நாள் கணக்கில் குளித்துக் கொண்டிருப்பதை அவர்கள் வியப்புடன் பார்ப்பார்கள்.
நிறையச் சமயங்களில் அவன் பறவைகளோடு பறவையாக நெடிதுயர்ந்த கொன்றை மரத்தின் கிளையில் அதன் செம்பூக்களிடையே அமர்ந்திருப்பான்.பறவைகள் அவனது இருப்பையே பொருட்படுத்தாமல் அமைதியாக அவன் அருகே வீற்றிருப்பது அவர்கள் பார்த்த அதிசயங்களில் ஒன்று.
அதை விட அவர்கள் வியந்து பார்க்கும் காட்சி ஒன்று உண்டு.
ஆறாம் மலைக் காட்டில் தேர்ந்த வேட்டைக் காரர்களான அவர்களுக்கே பல மாதங்களாகப் போக்குக் காட்டி வரும் ஆட்கொல்லிப் புலி ஒன்று இருக்கிறது.அதற்கு அவர்கள் 'மஞ்சள் காற்று' என்று பெயர் வைத்திருக்கிறாகள்.மஞ்சள் காற்று எப்போது அடிக்கும், எப்போது மறையும் என்று யாருக்குமே தெரியாது.
அந்த மஞ்சள் காற்றுக் கூட அவன் கண்மூடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது அவனருகில் அவர்களது வீட்டு நாய் போல் அவனது அருகில் விழித்தபடி படுத்துக் கிடக்கும்.அதற்குப் பிறகுதான் அவனை முடவாண்டிச் சித்தர் என்று அவர்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.
அவன் அவர்கள் யாருடனும் பேசியதே இல்லை.எப்போதாவது அவர்களைப் பார்ப்பதுண்டு.அப்போதுதான் அவனது கண்களை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
அப்ப்பா! என்ன கண்கள்!
பார்ப்பதற்கு மட்டுமின்றிப், பார்க்கப் படுவதற்குமான கண்கள்!
அவனது ஒரு கண நேரப் பார்வை பட்டாலே வைரமணி அருவியே சட்டென்று அவர்கள் மீது கொட்டித் தீர்த்ததைப் போல உடம்பே சில்லென்று வேர்த்துப் போகும்.
ஆறாம் மலையில் நிறையக் குகைகள் உண்டு.ஒரு குகைக்கு மட்டும் சூரியக் குகை என்று வேடுவர்கள் பெயர் வைத்திருந்தார்கள்.அந்தக் குகையில் மட்டும் மேல் கூரையில் ஒரு அரை அடி விட்டமுள்ள வட்டமாக மலையே வழி விட்டுச் சூரிய ஒளியும்,நிலவின் ஒளியும் உள்ளே பாயுமாறு அமைந்திருந்தது.
அந்த மலைத் தொடரில் மூன்றாம் மலை வரையிலுமே மனிதர்கள் வாழ்ந்தார்கள்.அடிவாரத்திலிருந்து மூன்றாம் மலை வரையிலுமே சிறு,சிறு வேட்டுவக் குடியிருப்புக்கள் இருந்தன.மூன்றாம் மலைக்கு மேல் கொடிய விலங்குகளும்,பனிக்குளிரும் மனிதர்களை மேலே வராவண்ணம் விலக்கி வைத்திருந்தன.
முடவாண்டிச் சித்தரைத் தவிர ஆறாம் மலையில் யாராலும் வாழ முடியாது என வேட்டுவக் கிராமங்களில் பேசிக் கொள்வார்கள்.
ஆறம் மலையில் மட்டும் பனி போர்த்திய வைகறை வேளைகளிலும்,அந்தி வேளைகளிலும் உடுக்கைச் சத்தம் கேட்கும். மேல் மலைக்குச் சென்ற வேடுவர்கள் சித்தர் கையில் என்றும் உடுக்கையைப் பார்த்ததில்லை.அதே போல் சில நேரங்களில் சூரியக் குகையில் மட்டும் நெருப்பெரிவது தெரியும்.அதற்கான சாதனங்களைக் குகைக்கு உள்ளேயோ,சித்தரின் கைகளிலோ அவர்கள் என்றுமே பார்த்ததில்லை.
ஒரு நாள் வைகறையில் அவன் வைரமணி அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவனது காலடியில் ஒரு மலைக் கருங்கல் அருவியோடு அருவியாக உருண்டு வந்து விழுந்தது.குனிந்து அதனைத் தொட்டுப் பார்த்தான்.
பல வருட அருவித் தண்ணீர் தேய்த்துத் தேய்த்துக் கல்லைக் கறுப்புப் பளிங்காக்கி இருந்தது. இரண்டடி உயரத்தில் கறுப்பு முட்டை போல் இருந்தது அந்தக் கல்.
அருவி தன் மேலே கொட்டக் கொட்டக் கல்லையே பார்த்துக் கொண்டிருந்த அவன்,பிறகு அதனை அனாயசமாக எடுத்துக் கொண்டு அருவியிலிருந்து சொட்டச் சொட்ட நனைந்தபடியே நடந்தான்.
சூரியக் குகைக்குள் கல்லைக் கொண்டு வந்த அவன் குகையின் நடுவில் அதனை நிறுத்தி வைக்கப் பளீரெனக் காலைக் கதிரவனின் ஒளி கல்லின் மேல் விழுந்தது.வெளியே சென்றவன் திரும்பி வந்த போது அவனது கையில் ஒரு சிற்பியின் உளியும்,சிறு சுத்தியலும் இருந்தன.
அவன் என்னைச் செதுக்கத் தொடங்கினான்.
தான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.
(எனது தரிசனம் தொடரும்)
Labels:
சிறுகதை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
