வியாழன், ஜனவரி 28, 2010

அடையாளம்.

ஐம்பத்து நாலு வயதில் அவளுக்கு ஹார்ட் அட்டேக்.
இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனைக் கட்டிலில் படுத்திருக்கும் போது,ஆண்டவனிடம் அவள் தனது நலம் கோரிப் பிரார்த்தனை செய்தாள்.
கடவுளும் அவள் முன் தோன்றி,அவளுக்கு இந்த வரத்தைத் தந்தார்.
'கவலைப் படாதே,பெண்ணே!இன்னும் உனக்கு, 43 வருடம்,8 மாதம்,15 நாட்கள் ஆயுளை நீட்டித்திருக்கிரேன்.நீ தைரியமாக இருக்கலாம்.'

அவளும் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மீதி வருடங்களை ,இளமையாகக் கழிக்க முடிவெடுத்துப் பரபரப்பாகச் செயல் பட்டாள்.
முகத் தோலின் சுருக்கங்களைப போக்கிக் கொண்டாள்.
பற்களை வரிசைப் படுத்தினாள்.
மார்பகங்களை நிமிர்த்திக் கொண்டாள்.
புதிய முடிகளைப் பதித்துக் கொண்டாள்.
இளமைப் பொலிவுடன் மருத்துவ மனையிலிருந்து, அவள் வெளியே வந்த போது,வேகமாக வந்த கார் ஒன்று அவள் மேல் மோதி, ஒரே கணத்தில் உயிரிழந்தாள்.
இறந்தவள் கோபமாகக் கடவுளின் முன்னே போய் நின்றாள்.
'நீ கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டாயா,கடவுளே? ஏன் மோத வந்த காரின் முன்னிருந்து என்னை நீ காப்பாற்றவில்லை?' என்று கத்தினாள், அந்தப் பெண்.
கடவுள் அமைதியாகச் சொன்னார்.
'மன்னிக்கவும்,உன்னை எனக்கு அடையாளம் தெரியவில்லை!'

27 கருத்துகள்:

  1. விதியை கடவுள் கூட மாத்தமுடியாது போலிருக்கு :)

    பதிலளிநீக்கு
  2. சார்... வெல்கம் பேக்!! :) :)

    ---

    ரொம்ப நாளா... உங்க பதிவு.. பின்னூட்டமெல்லாம் இல்லாம காய்ஞ்சி கிடக்கறோம். சீக்கிரம்.. உங்க வேலைப் பளு கம்மியாகி.. மீண்டும்.. வர....

    இப்படி ‘அடையாளம்’ கண்டுபிடிக்க முடியாத கடவுளை வேண்டிக்கிறேன்! :) :)

    பதிலளிநீக்கு
  3. ஸ்வாமி ஓம்கார் சொன்னது…
    Class Sick...Classic...!//

    :) :) நன்றியுடன் சிரிக்கிறேன்,ஸ்வாமிஜி.

    பதிலளிநீக்கு
  4. சின்ன அம்மிணி சொன்னது…
    விதியை கடவுள் கூட மாத்தமுடியாது போலிருக்கு :)//

    மின்னஞ்சலில் வந்த குறுங்கதை,மேடம்!

    பதிலளிநீக்கு
  5. ஹாலிவுட் பாலா சொன்னது…
    சார்... வெல்கம் பேக்!! :) :)

    ---

    ரொம்ப நாளா... உங்க பதிவு.. பின்னூட்டமெல்லாம் இல்லாம காய்ஞ்சி கிடக்கறோம். சீக்கிரம்.. உங்க வேலைப் பளு கம்மியாகி.. மீண்டும்.. வர....

    இப்படி ‘அடையாளம்’ கண்டுபிடிக்க முடியாத கடவுளை வேண்டிக்கிறேன்! :) :)//

    உங்கள் பதிவுகளைப் படித்துக் கொண்டுதானிருக்கிறேன்,பாலா. ஊக்கம் தரும் படங்கள் உங்களுக்கே கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
    என்ன பின்னூட்டம் இடுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கையிலேயே நேரம் ஓடி விடுகிறது...

    பதிலளிநீக்கு
  6. நமக்கான அடையாளம் எதுவோ அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும்.....

    பதிலளிநீக்கு
  7. விஜயமங்கலம் சின்னசாமி எப்போ வருவார் ?

    பதிலளிநீக்கு
  8. //கடவுள் அமைதியாகச் சொன்னார்.
    'மன்னிக்கவும்,உன்னை எனக்கு அடையாளம் தெரியவில்லை!'//

    ஆகா அடையாளத்தில் இவ்வளவு பிரச்சனையா? அடையாள அட்டை கழுத்தில் மாட்டிகொள்ள வேண்டுமா?

    நல்ல சிந்தனையுடன் சிரிப்பு

    வணக்கம் சார் மிக்க நன்றிங்க
    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    பதிலளிநீக்கு
  9. நல்ல பகிர்வு சார். ஹாலிவுட் பாலா சொன்ன மாதிரி, உங்கள் வேலைப் பளு குறைந்து வலையில் தீவிரமாக எழுத வேண்டும் என நானும் வேண்டிக்கொள்கிறேன்.

    //மகா சொன்னது…

    விஜயமங்கலம் சின்னசாமி எப்போ வருவார் ?//

    காத்திருக்கிறோம் சார்.

    பதிலளிநீக்கு
  10. சார் நல்லா இருக்கு! :-) வேலை பளு குறைந்து விட்டதா!

    பதிலளிநீக்கு
  11. அர்த்த பிதாகமன் நீவிர் வாழ்க்,

    பதிலளிநீக்கு
  12. //'மன்னிக்கவும்,உன்னை எனக்கு அடையாளம் தெரியவில்லை!' //

    இல்லைனா என்ன . ID card check பண்ணீ பாக்கவேண்டியதுதானே

    jaisankar
    jaisankarj@gmail.com

    பதிலளிநீக்கு
  13. ஐயா
    மிகவும் கலக்கலாக இருந்தது
    இது போல நேரம் கிடைக்கையில் எழுதவும்

    பதிலளிநீக்கு
  14. கோவி.கண்ணன் சொன்னது…
    அருமை !//

    மகிழ்ச்சி,கண்ணன்.

    பதிலளிநீக்கு
  15. மகா சொன்னது…
    நமக்கான அடையாளம் எதுவோ அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும்.....

    28 ஜனவரி, 2010 10:15 am
    மகா சொன்னது…
    விஜயமங்கலம் சின்னசாமி எப்போ வருவார் ?//

    கருத்துக்கு நன்றி,மகா.

    முதல் பாகத்தை ஞாபகம் ஊட்டி விட்டு, எழுத வேண்டுமா என்ற தயக்கத்தில் உள்ளேன்,மகா.

    பதிலளிநீக்கு
  16. ஆ.ஞானசேகரன் சொன்னது…
    //கடவுள் அமைதியாகச் சொன்னார்.
    'மன்னிக்கவும்,உன்னை எனக்கு அடையாளம் தெரியவில்லை!'//

    ஆகா அடையாளத்தில் இவ்வளவு பிரச்சனையா? அடையாள அட்டை கழுத்தில் மாட்டிகொள்ள வேண்டுமா?

    நல்ல சிந்தனையுடன் சிரிப்பு

    வணக்கம் சார் மிக்க நன்றிங்க
    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்//

    மகிழ்ழ்சி,ஞானம்.

    பதிலளிநீக்கு
  17. செ.சரவணக்குமார் சொன்னது…
    நல்ல பகிர்வு சார். ஹாலிவுட் பாலா சொன்ன மாதிரி, உங்கள் வேலைப் பளு குறைந்து வலையில் தீவிரமாக எழுத வேண்டும் என நானும் வேண்டிக்கொள்கிறேன். //

    நன்றி சரவணன்.
    நான் இருக்கும் திரைப் படத்துறையில் ‘வேலைப் பளு’ என்பதே இல்லை.
    அதனைப் பளுவாக நினைத்து விட்டால் மக்கள் ந்ம்மைச் சுமையாக எண்ணிக் கீழே இறக்கி வைத்து விடுவார்கள்!

    பதிலளிநீக்கு
  18. கிரி சொன்னது…
    சார் நல்லா இருக்கு! :-) வேலை பளு குறைந்து விட்டதா!//

    மகிழ்ச்சி.நன்றி,கிரி.

    பதிலளிநீக்கு
  19. ஜோதிஜி சொன்னது…
    அர்த்த பிதாகமன் நீவிர் வாழ்க்,//

    அர்த்தம் புரியவில்லையே,ஜோதிஜி.

    பதிலளிநீக்கு
  20. நசரேயன் சொன்னது…
    அருமை//
    நன்றி,மகிழ்ச்சி நச்ரேயன்.

    பதிலளிநீக்கு
  21. jaisankar jaganathan சொன்னது…
    //'மன்னிக்கவும்,உன்னை எனக்கு அடையாளம் தெரியவில்லை!' //

    இல்லைனா என்ன . ID card check பண்ணீ பாக்கவேண்டியதுதானே

    jaisankar
    jaisankarj@gmail.com//

    அடையாளமே தெரியாத போது, அடையாள அட்டையை எல்லாம் யார் பார்ப்பார்கள் என்கிறார்,கடவுள்.

    பதில் சிரிப்புக்கு நன்றி,ஜெய்ஷங்கர்.

    பதிலளிநீக்கு
  22. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…
    ஐயா
    மிகவும் கலக்கலாக இருந்தது
    இது போல நேரம் கிடைக்கையில் எழுதவும்//

    கண்டிப்பாக,கார்த்தி. நலம்தானே?

    பதிலளிநீக்கு
  23. ஜாக்கி சேகர் சொன்னது…
    செம டுவி்ஸ்ட்...//

    ஒரே துறையில் இருந்தும் எவ்வளவு நாள் கழித்து சந்திக்கிறோம்?
    மகிழ்ச்சி,சேகர்.

    பதிலளிநீக்கு