வானம் பார்த்த மனம்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானம் பார்த்த மனம்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 26, 2009

எண்கள் என்னும் இயற்கையின் மொழி..4

இயற்கையின் உண்மையான மொழியையே எண்களின் மூலமாகத்தான் புரிந்து கொள்கிறோம் எனக் கண்டோம்.ஆனால் எண்களின் மொழியையும் தாண்டும் கட்டங்களிலும் இயற்கை இயங்குகிறது.'Infinity' என்று கணித நூல்களில் சொல்லப் படும் இதனை நாம் 'அனந்தம்' என்றும் 'எல்லையற்றது' என்றும் சமய நூல்களில் சொல்லக் காணலாம். மொழிகள் அற்ற இடம் பேரமைதியாகவும்,பேரானந்தமாகவும் சித்தரிக்கப் படும் உயிரின் உச்சகட்ட நிலைகள் அவை.
அனந்த கோடி என்ற சொற்கள் அடிக்கடி புழஅங்கும் உயிரின் நிலைகளை ஆன்மிகம் மட்டுமே பயன் படுத்தும்.அறிவியல் தொட தயங்கும் நிலைகள் அவை.'Infinity' பற்றிக் கணித நூல்களே சொல்ல வார்த்தைகள் போதுமானவை இன்றி ஒதுங்கி நிற்கிறது.இதை ஓரளவேனும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் உயிர் என்றால் என்னவென்ற ஒரு கண்ணோட்டம் வேண்டும்.
சிந்தித்துப் பார்த்தால்,உயிர் என்பதே இயற்கை அன்னையின் 'எளிமையின் உச்ச கட்டம்' எனத் தோன்றுகிறது.இந்தப் பேரண்டத்தின் இத்தனாயிரம் கோடி பௌதீக விதிகளையும் தொகுத்து,அனைத்து உய்ரினங்களும் புலன்கள் வழி அவற்றை உணர்ந்து கொள்ளும் அரிதினும் அரிதான கொடையை அவள் அருளி இருக்கிறாள்.
சற்றே சிந்தியுங்கள்.
நாம் பார்ப்பதற்கு ஒளிஇயலின் விதிகள் எதுவும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வெப்பத்தை உணர்வதற்கு Thermodynamics laws எதுவும் படித்துப் புரிந்திருக்க வேண்டிய தொல்லை இல்லை.
உடலுக்குள் இயங்கும் கோடான கோடி செல்களும் நமது அறிவின் தயவின்றித் தங்களைத் தாங்களே வழி நடத்திச் சென்று கொண்டிருக்கின்றன.
இந்தப் பேரண்டத்தை உயிர்கள் மூலம் அணு அணுவாகக்,கணந்தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது இயற்கை .
தனது அனைத்து அறிவினையும் உயிர்களுக்குள்ளே ஒப்படைத்து விட்டு,அவற்றின் செயல்பாடுகளுக்கு மட்டும் அந்த அறிவு பயன் படுவதற்கும்,சிந்தித்தால் பெறுவதற்கு அரியதாகவும் இருக்கும் படியான உயிர் விளையாட்டையே இயற்கை அன்னை ஆடிக் கொண்டிருக்கிறாள்.
மருந்துக்கடைகளில் இருக்கும் அத்தனை மருந்துகளும் நமது உடல் தயாரிக்கும் ரசாயனங்களின் செயற்கை வடிவங்களே.
மின்காந்த அலைகளைப் பற்றி நமக்குத்தான் இந்த நூற்றாண்டில் தெர்யும்.ஆனால் நமது உடலுக்குக் கோடான கோடி வருடங்களாகத் தெரியும்.
நுண் அணுத் துரையின் அனைத்து அறிவும் கொண்டிருப்பதனால்தான் நமது செல்கள் செவ்வனே இயங்குகின்றன.
இந்த உட்புறப் பேரறிவினை நாம் நமது முயற்சியால் பெற இயலுமா ?



செவ்வாய், ஜனவரி 13, 2009

காலமும்,தருணங்களும்..

காலம் வேறு.தருணம் வேறு.Time and Moment.
ரோஜா அழ்கானது என்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்உண்மை .ஆனால் எல்லாத் தருணங்களுக்கும் பொருந்துமா ?
தீராத கண் வலியோடு துடிக்கும் ஒருவனுக்கு அந்தத் தருணத்தில் ரோஜா அழ்காகத் தோன்றுமா ?
ஆனால் உண்மைகளைப் பற்றிய நமது பொதுவான மதிப்பீடுகள் எல்லாமே காலத்தின் அடிப்படையில் செய்யப் படுவதில்தான் தவறுகளே நேர்கின்றன.அவை தருணங்கலோடு முரண்படுகின்றன.
வரலாறுகளில் காலம் தெரியும் ,ஆனால் தருணங்கள் தெரியாது.ஏனெனில் காலம் இயந்திரத் தனமானது.ஒன்றுக்குப் பிறகு இரண்டுதான்.திங்களுக்குப் பிறகு செவ்வாய்தான்.அது தர்க்க ரீதியான,கணித ரீதியான கணிப்புகளுக்கு உட்பட்டது.ஆனால் தருணங்கள் நிகழ காலத்தின் உயிப்போடு செயல் படுபவை.அவை கணத்துக்குக் கணம் மாறுபவை. தர்கத்துக்கும் கணிதத்துக்கும் கட்டுப் படாதவை.நமது அறிவு காலத்தை வேண்டுமானால் அறிய முடியும். ஆனால் தருணங்களை ஆராய , அறிவைத் தாண்டிய ஒரு அணுகுமுறை வேண்டும்.அதைத்தான் ஆன்மிகம் பல வழிகளில் முயன்று கொண்டிருக்கிறது.பல சாதனங்களையும் நமக்கு அறிமுகப் படுத்துகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டு,அன்று வாழ்ந்த எல்லாரையும் கார்ல் மார்க்ஸ் ஆக்கி விடவில்லை .அந்த ஒரு மனிதருக்குள் மட்டும் மார்க்சிய சிந்தனைகள் முகிழ்த்தது எப்படி?
ஒரே காலத்தில் ஒரே சூழ்நிலையில் ஒரே குடும்பத்தில் வாழும் ஒருவன் அடிமையாகவே வாழ்கிறான் .இன்னொருவன் புரட்சிக்காரனாகி அவன் வாழும் சமூகத்தையே மாற்றி அமைத்து சீர் செய்கிறான். எப்படி? இதற்குஅவர்கள் வாழும் காலத்தையும் இடத்தையும் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் போதாது.அவர்களை முற்றிலும் புரிந்து கொள்ள அவர்கள் வாழும் காலத்தையும் இடத்தையும் மட்டும் ஆராய்ந்து முடிவுக்கு வர முடியாது.
வேறு வேறு காலங்களில் உருவான எண்ணங்களை அவற்றின் காலத்துக்கு மட்டுமே மதிப்புக் கொடுத்து ஏற்றுக் கொள்ளப் படுவதினால்தான் மதங்களின்,தத்துவங்களின் பயன்கள் நமக்குக் கிட்டாமல் போகின்றன.
சிந்தனைகளை, அவை உறுவான தருணங்கலோடு உள்வாங்கும் போதுதான் அவற்றின் உண்மையான புரிதல்கள் நேரும் .இதனால்தான் நிறைய ஆன்மீகத் தளங்களில் குருவிடம் சிஷ்யன் நேரடியாகப் பாடம் பெற வேண்டுமென வலியுறுத்தப் படுகிறது.
அனைத்துச் சமுதாயங்களிலும் கிடைத்த அபூர்வமான எண்ணங்கள் வலிவிழந்து போனதின் முக்கிய காரணமே அவை உறுவான தருணங்களின் உயிர்ப்பு செத்துப் போஅய் அவை வெறும் சாச்திரங்களாக காகிதங்களில் மட்டும் காலத்தின் சாட்சிகளாக இருப்பதே ஆகும்.
நாம் பிறந்த காலமும் இடமும் மட்டுமே நாம் யார் என்பதைத் தீர்மானிப்பதில்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் நாம் பிறந்த தருணத்தை ஆராய்கின்றன ஜாதக சாஸ்த்ரங்கள்.இதே போல் இன்றைக்கு
நவீன இயற்பியலில் நுண் அணு துறைகளில் காலத்தை விட தருணங்களே அதிகம் ஆராயப் படுகின்றன.
மேலும் யோசிப்போம்....

ஞாயிறு, ஜனவரி 11, 2009

ஒரே பதில் ..ஆனால் ஒரு கோடிக் கேளவிகள்

என்றோ எங்கோ படித்த ஒரு வரிக்கு எவ்வளவு பெரிய அர்த்தம் என்று இன்றளவும் எனக்குப் புரிந்து கொண்டே இருக்கிறது .
மூன்று என்பது விடையாக வர வேண்டுமென்றால் எத்தனை கோடிக் கணக்குகள் வேண்டுமானாலும் போடலாம்.
3x1=3..3-0=3..3+0=3..5-2=3..2+1=3.. இப்படி எண்ணற்ற கணக்குகள் மூன்று என்ற ஒரே விடைக்கு போட்டுக் கொண்டே போகலாம்.
இந்த சமன்பாட்டில் விடையும் சரி ,கணக்குகளும் சரியே என்பது ஆரம்பக் கணிதம் படிக்கும் குழ்ந்தைக்கும் கூடத் தெரியும்.
சரி,
இதே சமன்பாட்டை நம் வாழ்க்கைக்கு பிரயோகித்தால் அது ஒரு ஆழமான சிக்கலுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
உதாரணமாக மகிழ்ச்சியை எடுத்துக் கொள்வோம்.
மகிழ்ச்சி என்ற ஒரு விடைக்கு நாம் ஏராளமான கணக்குகள் போடுகிறோம். மகிழ்ச்சிக்காக எழுதுகிறோம்..பாடுகிறோம் ... குடிக்கிறோம் ..சமூகத்துக்காக உழைக்கிறோம் ...கொலை செய்கிறோம் ....இதெல்லாம் தப்பு என்று வாதாடிக் கொண்டிருக்கிறோம் ....காதலிக்கிறோம் ...குடும்பம் நடத்துகிறோம்.. குழந்தையைக் கொஞ்சுகிறோம் ....அல்லது கடத்திக் கொண்டு போய் வியாபாரம் செய்கிறோம் ..பெண்களைக் கெடுக்கிறோம் ..ஆலயங்களுக்குப் போகிறோம்.. குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கிறோம் ... சாகவும் செய்கிறோம்..
இப்படி மகிழ்ச்சி என்ற ஒரே விடைக்கு நாம் பல கணக்குகளைப் போடுகிறோம் . ஆனால் முந்தைய சாதாரணக் கணக்குச் சமன்பாட்டில் ஒத்துக் கொண்டதைப் போல இங்கே விடையும் சரி கணக்குகளும் சரி என்று ஒப்ப மாட்டோம் என்பதே நம் முன் இருக்கும் சிக்கலே.
மகிழ்ச்சி என்ற நியாயமான ,சரியான விடைக்கு நாம் போடும் சில கணக்குகள்தான் தப்பு என்கிறது நம் சமூக,அறவியல் சட்டங்கள்.
நான் கணிதவியல் பட்டதாரி.ஆனால் எனக்கே இது வியப்பான உண்மையாக இருக்கிறது.
ஒரே விடைக்குப் பல கணக்குகள் என்பதே முரண்பாடு.அதிலும் விடை மட்டும் சரி ஆனால் சில கணக்குகள் மட்டும் தவறு என்பது எப்படி சாத்யமாகும்?.அப்படி என்றால் சமன்பாட்டில்தான் எங்கோ கோளாறு இருக்க வேண்டும்.
சரி, நம் சமன்பாட்டை எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி என்ற விடைதான் சிக்கலையே உருவாக்குகிறது என்பது சற்றே யோசித்தால் புரிகிறது.
எப்படி?மகிழ்ச்சி என்ற விடை சரிதான்,ஆனால் அதை முன்பாகவே தீர்மானித்துக் கொள்ளும் கோட்பாடுதான் நமக்குப் பிரச்னையே .
விடையை முன்னரே தீர்மானித்துக் கொள்வது சாதாரணக் கணக்குக்கு வேண்டுமானால் சரி.ஆனால் நம் வாழ்க்கைக் கணக்குக்கு சரியில்லை என்பதுதான் அது!
நமது பெரும் பாலான கேள்விகளுக்கும் தப்பான விடைகளே வருவது அந்தத் தீர்மானத்தினால்தான். ஏன்?
பொதுவாகவே (நாம் தேடல் என்று கூறிக் கொண்டு ),நம் கேள்விகளுக்குத்தான் விடைகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று தப்பாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் உண்மையில் நாம் நம் பதில்களுக்கான கேள்விகளையே தேடிக் கொண்டிருக்கிறோம்.
நான் கேள்வி கேட்பதே பதிலை ஒத்துக் கொள்வதற்காகத்தான்.


எல்லோருக்குள்ளும் இருக்கும் விடைகள்தான் துயரமே.நாம் எல்லோரும் பதில்களை வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ற கேள்விளைக் கேட்டுக் கொண்டு திரிகிறோம் .


எனில், நமக்கு இந்த விடைகள் எங்கிருந்து கிடைத்தன?


நாம் பிறப்பதற்கு முன்னரே நம் விடைகள் பிறந்து விட்டன.


நமது பரிணாம விதிகள்,உடற்கூற்று விதிகள், நாம் பிறக்கும் குடும்ப ,சமூகச் சூழல்கள்,(நீங்கள் நம்பினால் கிரகச் சேர்க்கைகள்)இதெல்லாம் சேர்ந்து உருவாகிய நமது மன இயக்கங்கள் இவை எல்லாம் ஏற்கனவே தந்த விடைகளுடந்தான் நாம் பிறக்கிறோம் .
நாம் கேட்கும் கேள்விகளுக்கு இந்தக் கணத்தில் கிடைக்கும் பதில்களை ,ஏற்கனவே நம்முடன் பிறந்த பதில்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தே எதனையும் ஒத்துக் கொள்கிறோம் .எனவே நம் பழைய விடைகளை இழந்தால் ஒழிய புதிய பதில்களை நாம் பெற மாட்டோம்.
இதனாலேயே ஏசு 'உனது பெற்றோர்களைக் கொன்ற பின்னரே என் பின்னால் வா'என்றார்.சென் ஞானிகள் மனதைக் காலி ஆக்கிய பின்னரே சிஷ்யனாக வா என்றார்கள். நிகழ காலத்திலேயே இரு என்பதெல்லாமே இதன் அடிப்படையில்தான்.
தொடர்ந்து யோசிப்போம்...