திங்கள், ஜனவரி 26, 2009

வலைத்தளத்தின் வல்லமை...

'தொடக்கம் முடிவில் இருக்கிறது' என்று நான் இங்கே ஆங்கிலத்தில் எழுதியிருந்த வலைப் பதிவு ,எங்கோ ஆபிரிக்காவில் இருக்கும் ஜூலியட் ஜோன்ஸ் என்ற பெண்மணியின் மனதைத் தொட்டிருக்கிறது என்பது அவர் எனக்கு அனுப்பியிருந்த மின்கடிதத்தின் மூலம் அறிந்த போது நானே திகைத்துப் போனேன்.
தொலைவையும் ,காலத்தையும் இமைப் பொழுதில் கடந்து செல்லும் இந்த சாதனத்தின் ஆற்றல்,மனிதர்களை ஆக்க பூர்வமாக இணைப்பதில் மட்டும் செயல் பட்டால் எவ்வளவு கனவுகள் நனவாகும்!
வலைப் பதிவாளர்கள் எல்லோரும் கலைப் பதிவாளர்களாக நான் பிரார்த்திக்கிறேன்...