புதன், ஜனவரி 21, 2009

எண்கள் என்னும் இயற்கையின் மொழி..1

மனித உடலின் வெப்பநிலை 98.4 டிகிரி.
ரத்த அழுத்தம் 80/120.
இதயத் துடிப்பு சராசரியாக 72 முறை நிமிடத்திற்கு .
வங்கி இருப்புத் தொகை ரூபாய் 25,875.89 .
ஒளியின் வேகம் 1,86,000 மைல்/வினாடி.
பண வீக்கக் குறியீட்டு எண் 8.5
மழையின் அளவு 5 செ.மீ .
இயற்கை ஆனாலும் சரி,மனிதக் கண்டு பிடிப்புக்களானாலும் சரி, எணகள் மூலமாகவே விளங்கிக் கொள்கிறோம்.
சொல்லப் போனால் இயற்கை நம்முடன் உரையாடும் மொழியே எண்கள்தான்.அதனால்தான் செயற்கையிலும் நாம் எண்களைத் தேடுகிறோம். அதை நம் பாஷையில் அறிவியல் என்று கூறிக் கொள்கிறோம் .
எண்களுக்கு நாம் வைத்திருக்கும் விளக்கமே ,மனித மொழிகள் அனைத்துமே.
ஆகவே எண்களைப் புரிந்து கொண்டால் ஒழிய இயற்கையின் உரையாடலை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.
சரி,எண்களைப் புரிந்து கொள்ள நீங்கள் மிகப் பெரிய கணித மேதையாக இருக்க வேண்டுமா ,அல்லது அதனுடைய அடுத்த கட்ட தகுதியான அறிவியிலானாகஇருக்க வேண்டுமா?
தேவை இல்லை என்கிறது சைபர்ணடிக்ஸ் என்ற அறிவியல் துறை.
மருத்துவத்தைப் பற்றி எதுவுமே தெரியாத உங்களுக்குள் இருக்கும் தெர்மா மீட்டர் உங்களது வெப்ப நிலையை எப்போதும் அளந்து கொண்டிருக்கிறது.அதுதான் உங்கள் உடலுக்குள் வெப்பநிலை சற்றே மீறினாலும் உங்களுக்கு காய்ச்சல் என்று அறிவுறுத்துகிறது .

எண்கணிதம் தெரியாத காக்கை தனது கூட்டில் தான் இட்ட எண்பத்து நாலு முட்டைகளில் ஒன்றைக் காணவில்லை என்றாலும் 'கா கா 'என்று பதறுகிறது.

எந்த வெப்ப நிலையையோ ,அதை நிர்வகிக்கும் ஏ.சி.தொழில் நுட்பமோ தெரியாத தேனீக்கள் தன் கூட்டுக்குள் நிரந்தர வெப்பத்தை கட்டிக் காக்கிறது.

ஏன் ,அடர்ந்த காட்டினில் இருக்கும் மரங்கள் ,தங்களுக்கு நேரும் ஆபத்தை எதோ ஒரு மொழியில் தொலை தூரத்தில் இருக்கும் தங்கள் இனத்தவர்க்கு புலப் படுத்தி விடுகிறது.(உபயம் :ஜுராசிக் பார்க் நாவல் )
எப்படி ?
நமக்குள் இருக்கும் இயற்கை அறிவை நாம் ,நமது புற அறிவால் மறந்து விட்டோம் -கருவிலேயே நாம் கற்ற நீச்சலை மறந்ததைப் போல ...
நமக்குள் இருக்கும் இந்த இயற்கை அறிவைத் திரும்பப் பெறுவதே யோகம் ..
அதற்குத்தான் நமது இத்தனை சாஸ்திரங்களும் ..
மீண்டும் படைப்பை நோக்கிச் செல்லும் பயணம்..
உண்மையில் இந்தக் கணத்தோடு முடியும் நெடியதொரு பயணம்..!!
பூஜ்யத்தின் கரையில் இருந்து ஆரம்பிக்கும் அந்த எண்களின் கடலுக்குள் நீந்துவோம் ....